தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களுக்கு “தகைசால் தமிழர்" விருது..! -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

0 3575
தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்த “தகைசால் தமிழர்" விருது - புதிய விருதை உருவாக்க முதலமைச்சர் உத்தரவு

மிழின வளர்ச்சிக்கு பங்காற்றியவர்களை கௌரவிக்கும் விதமாக, 'தகைசால் தமிழர்' என்ற பெயரில் புதிதாக விருது உருவாக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்த, 'தகைசால் தமிழர்' என்ற புதிய விருது உருவாக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான விருதாளரைத் தேர்வு செய்ய, முதலமைச்சர் தலைமையில் தமிழ் ஆட்சி மொழி மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர், தலைமைச் செயலாளரை உள்ளடக்கிய குழு அமைக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் தேர்வுசெய்யப்படும் தகைசால் தமிழர் விருது பெறும் விருதாளருக்கு பத்து லட்சம் ரூபாய்க்கான காசோலையும், பாராட்டுச்சான்றிதழும், சுதந்திர தின விழாவின்போது, முதலமைச்சரால் வழங்கப்படும் என அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments